என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செல்லூர் ராஜூ மீது வழக்கு தொடருவோம்: சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் பேட்டி
காரைக்குடி:
‘ஆச்சி’ குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் கூறியதாவது:-
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, ரஜினிகாந்த் ஆட்சியை பிடிக்க முடியாது. காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம் என்று கூறியிருக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். அமைச்சரின் இந்த கருத்து நகரத்தாரின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது.
பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் மீது முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். மேலும் காரைக்குடி ஆச்சியை பற்றி நான் சொல்லவில்லை. மனோரமா ஆச்சி பற்றி தான் சொன்னேன் என்று தற்போது கூறுகிறார். மனோரமா பற்றி பேசவும் அவருக்கு எவ்வித உரிமையும் இல்லை.
அவர் உரிய முறையில் வருத்தம் தெரிவித்திருந்தால் நகரத்தார் சமூகத்தினர் அமைதியாக இருந்திருப்பார்கள். இப்போது அவர் வருத்தம் தெரிவித்த விதம் ஏற்கக்கூடியதாக இல்லை.
நகரத்தார் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்னிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்கு தொடர வேண்டும் என்று கூறு கிறார்கள். அமைச்சர் உரிய முறையில் வருத்தம் தெரிவிக்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடர ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #ministersellurraju
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்