search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலிகிராமம், விருகம்பாக்கத்தில் வீடு புகுந்து திருடும் பெண் சிக்கினார்
    X

    சாலிகிராமம், விருகம்பாக்கத்தில் வீடு புகுந்து திருடும் பெண் சிக்கினார்

    சாலிகிராமம் மற்றும் விருகம்பாக்கத்தில் வீடு புகுந்து திருடும் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சாலிகிராமம், சேது தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவரின் வீட்டில் 2 செல்போன்கள், ரூ.5 ஆயிரம் கொள்ளை போனது. போலீசார் அங்குள்ள கேமராவை ஆய்வு செய்தபோது பெண் ஒருவர் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

    இந்த நிலையில் நடேசன் நகர் பூங்கா அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பையுடன் நடந்து சென்ற பெண்ணிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் தரக்காடு கிராமம் பேரணாம்பட்டை சேர்ந்த ‌ஷபானா என்பதும், சாலிகிராமம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    போலீசார் ‌ஷபானாவை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரம், 2 செல்போன்கள் மற்றும் 1 லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ‌ஷபானா அளித்த தகவலின் படி திருடிய போன், லேப் டாப்களை வாங்கிய பர்மா பஜாரை சேர்ந்த அப்துல் ரசாக் மற்றும் விஜயகுமார் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மண்ணடி பகுதியில் வடக்கு கடற்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்துக்கிடமாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவன் வியாசர்பாடியை சேர்ந்த அஜித் என்கிற மிட்டாய் அஜித் என்பதும், கூட்டாளிகளுடன் சேர்ந்து காற்றுக்காக திறந்து இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

    அவன் கொடுத்த தகவலின்படி நண்பர்களான மண்ணடியை சேர்ந்த 17 வயது சிறுவன், வியாசர்பாடியை சேர்ந்த மற்றொரு அஜித் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பவுன் நகை அரை கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×