search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்வாயில் வீசப்பட்ட குழந்தை பிணத்தை படத்தில் காணலாம்.
    X
    கால்வாயில் வீசப்பட்ட குழந்தை பிணத்தை படத்தில் காணலாம்.

    கால்வாயில் பிணமாக கிடந்த குழந்தை கொன்று வீச்சு? - போலீசார் தீவிர விசாரணை

    திருச்செந்தூரில் கால்வாயில் பிணமாக கிடந்த குழந்தை குறித்து விசாரணை நடத்த போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ரெயில் நிலையத்தை அடுத்த நத்தக்குளம் கால்வாய் வழியாக உபரிநீர் கடலுக்கு செல்கிறது. இந்த கால்வாய் பாலத்தை கடந்து தான் அனைத்து ரெயில் களும் திருச்செந்தூர் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கிறது.

    இந்த கால்வாயின் ரெயில்வே பாலத்துக்கும், திருச்செந்தூர் தூத்துக்குடி மெயின் ரோட்டில் உள்ள பாலத்துக்கும் இடையில் நேற்று மதியம் 3 வயது ஆண் குழந்தை இறந்து, உடல் அழுகிய நிலையில் கால்வாயில் கரை ஒதுங்கி கிடந்தது. அந்த குழந்தையின் வலது கையை நாய்கள் கடித்து குதறியதால், உருக்குலைந்து காணப்பட்டது.

    அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தை பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த குழந்தை கருப்பு நிற சட்டையும், மஞ்சள் நிற கால்சட்டையும் அணிந்து இருந்தது. திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் ஆண் குழந்தை ஏதேனும் மாயமாகி உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அந்த குழந்தை ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்ததா? அல்லது கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை கொன்று, உடலை ரெயிலில் கொண்டு வந்து கால்வாயில் வீசி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபற்றி விசாரணை நடத்த போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதி முழுவதும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  #tamilnews



    Next Story
    ×