search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் போலி பெண் டாக்டர் கைது
    X

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் போலி பெண் டாக்டர் கைது

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக உள்ளனர்.

    இன்று காலை வழக்கம் போல் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி பரபரப்பாக காணப்பட்டது. அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தான் சிகிச்சை அளிக்க வந்திருப்பதாக கூறி டாக்டர் உடை, ஸ்டெதஸ்கோப்புடன் சுற்றி வந்தார்.

    திடீரென அவர் ஆஸ்பத்திரி டீன் அறைக்குள் செல்ல முயன்றார். சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    இதையடுத்து அவரை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மதுராந்தகத்தை அடுத்த மேற்கு செய்யூரைச் சேர்ந்த சகிலாபாபி என்பது தெரிந்தது.

    அவர் போலீசாரிடம் கூறும்போது, காலை 7 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டேன். டாக்டர் உடை புதுச்சேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் கிடைத்தது. மருத்துவம் படித்து உள்ளேன். மருத்துவ தேர்வு எழுத வந்தேன் என்று கூறி உள்ளார்.

    முன்னுக்கு பின் முரணாக சகிலாபாபி பேசி வருவதால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அவரிடம் செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பிடிபட்ட சகிலாபாபி நோயாளிகளுக்கு சிசிச்சை அளித்தாரா? என்று டாக்டர்களும் விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் போலி டாக்டர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    Next Story
    ×