search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chengalpattu govt hospital"

    • ஜெயஸ்ரீக்கு சுகபிரசவகத்தில் பெண்குழந்தை பிறந்து உள்ளதாக அங்கிருந்த நர்சுகள் துரையிடம் கூறினர்.
    • குழந்தையை உடனடியாக பார்க்க முடியாது அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

    செங்கல்பட்டு:

    செய்யூர் அடுத்த கொடூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. தற்போது ஜெயஸ்ரீ மீண்டும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் பவுஞ்சூரில் உள்ள ஆரம்ப அரசு சுகாதார நிலையத்தில் பரிசோதித்த போது குழந்தையின் எடை அதிகமாக உள்ளது உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அங்கிருந்த டாக்டர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

    இதையடுத்து ஜெயஸ்ரீயை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து முதல் குழுந்தை அறுவை சிகிச்சை இன்றி பிறந்ததால் தற்போதும் ஜெயஸ்ரீக்கு சுகபிரசவம் ஆக முயற்சி செய்தனர்.

    இந்த நிலையில் ஜெயஸ்ரீக்கு சுகபிரசவகத்தில் பெண்குழந்தை பிறந்து உள்ளதாக அங்கிருந்த நர்சுகள் துரையிடம் கூறினர். மேலும் குழந்தையை உடனடியாக பார்க்க முடியாது அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

    நீண்ட நேரத்திற்கு பின்னர் குழந்தையை துரை பார்த்தபோது குழந்தையின் தலையில் ரத்த கசிவும், வலது கை எலும்பு முறிந்து கட்டுபோடப்பட்டும், இடது கை நரம்பு பாதித்து அசைவற்றும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ஜெயஸ்ரீக்கு உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்க்காததே குழந்தையின் பாதிப்புக்கு காரணம் என்று டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுதொடர்பாக துரை செங்கல்பட்டு நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரசவத்தில் குழந்தையின் கை எலும்பு முறிந்து பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் விஜய பாஸ்கர் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைப் பிரிவை தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைப் பிரிவு, மாவட்ட இடைநிலை இடையீட்டு சேவைகள் மையம், முதியோர் பராமரிப்பு பிரிவு, மத்திய நவீன விரிவுரைக்கூடம் மற்றும் புலன் உணர்வு தூண்டும் பூங்கா ஆகியவற்றை திறந்து வைத்து மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றினை நட்டார். பின்னர் மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவில் சுகாதார விழிப்புணர்வு வண்ண ஓவியங்களை வரைந்தமைக்காக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி அவர் பேசுகையில்,

    “செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.60 கோடி மதிப்பில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியம் மையம், ரூ.4 கோடி மதிப்பில் புதிய டருமா கேர் சென்டர், ரூ.3.41 கோடி மதிப்பில் முடநீக்கியல் மையம், ரூ.8.8 கோடி மதிப்பில் அதி நவீன உபகரணங்கள், ரூ.1.55 கோடி செலவில் மருத்துவ திறன் மேம்பாட்டுக் கூடங்கள், ரூ.1 கோடி செலவில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மையமாகக் கொண்டு (எச்.யு.பி.) அவற்றை சார்ந்து மருத்துவமனைகளிலும் மாரடைப்பு சிகிச்சை பிரிவுகள், ரூ.73.00 லட்சம் செலவில் காது வால் நரம்பு உள்வைப்பு கருவி பொருத்தும் மையம் தொடங்கப்படும்.

    ரூ.42.5 லட்சம் மதிப்பில் குருதி பகுப்பாய் கருவிகள், ரூ.9.54 லட்சம் செலவில் முதியோர் நலப் பிரிவுகளை தொடங்கத் தேவையான மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் உயர்தர மருத்துவ சேவைகளை பெறுவார்கள் என்றார். #TNMinister #Vijayabaskar
    ×