என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி"

    • இரும்பு கம்பியுடன் மின்வயரும் அறுந்ததால் தரைதளம் வரை செல்லாமல் முதல் மாடியிலேயே ‘லிப்ட்’ நின்றுவிட்டது.
    • அருகில் இருந்தவர்கள் ‘லிப்ட்’டின் கதவை உடைத்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3-வது தளத்தில் உள்ள 'லிப்ட்'டை நோயாளிகள், டாக்டர்கள், ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 4½ மணியளவில் 3-வது மாடியில் இருந்து ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் உள்ளிட்ட 12 பேர் 'லிப்ட்'டில் ஏறினர். அப்போது திடீரென 'லிப்ட்'டை தாங்கி செல்லும் இரும்பு கம்பி அறுந்து மளமளவென முதல் தளத்தில் இறங்கி நின்றது. மேலும் இரும்பு கம்பியுடன் மின்வயரும் அறுந்ததால் தரைதளம் வரை செல்லாமல் முதல் மாடியிலேயே 'லிப்ட்' நின்றுவிட்டது. இதனால் 'லிப்ட்'டில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அருகில் இருந்தவர்கள் 'லிப்ட்'டின் கதவை உடைத்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதுபோன்ற சம்பவம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 4-வது முறையாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெயஸ்ரீக்கு சுகபிரசவகத்தில் பெண்குழந்தை பிறந்து உள்ளதாக அங்கிருந்த நர்சுகள் துரையிடம் கூறினர்.
    • குழந்தையை உடனடியாக பார்க்க முடியாது அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

    செங்கல்பட்டு:

    செய்யூர் அடுத்த கொடூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. தற்போது ஜெயஸ்ரீ மீண்டும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் பவுஞ்சூரில் உள்ள ஆரம்ப அரசு சுகாதார நிலையத்தில் பரிசோதித்த போது குழந்தையின் எடை அதிகமாக உள்ளது உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அங்கிருந்த டாக்டர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

    இதையடுத்து ஜெயஸ்ரீயை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து முதல் குழுந்தை அறுவை சிகிச்சை இன்றி பிறந்ததால் தற்போதும் ஜெயஸ்ரீக்கு சுகபிரசவம் ஆக முயற்சி செய்தனர்.

    இந்த நிலையில் ஜெயஸ்ரீக்கு சுகபிரசவகத்தில் பெண்குழந்தை பிறந்து உள்ளதாக அங்கிருந்த நர்சுகள் துரையிடம் கூறினர். மேலும் குழந்தையை உடனடியாக பார்க்க முடியாது அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

    நீண்ட நேரத்திற்கு பின்னர் குழந்தையை துரை பார்த்தபோது குழந்தையின் தலையில் ரத்த கசிவும், வலது கை எலும்பு முறிந்து கட்டுபோடப்பட்டும், இடது கை நரம்பு பாதித்து அசைவற்றும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ஜெயஸ்ரீக்கு உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்க்காததே குழந்தையின் பாதிப்புக்கு காரணம் என்று டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுதொடர்பாக துரை செங்கல்பட்டு நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரசவத்தில் குழந்தையின் கை எலும்பு முறிந்து பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேற்கூரையில் உள்ள இடைவெளி வழியாக அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பகுதிக்குள் மழைநீர் புகுந்தது.
    • மழைநீர் ஒழுகும் இடத்தை ஆய்வு செய்து அதனை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு செங்கல்பட்டு பகுதியில் பலத்த மழை தொடர்ந்து நீடித்தது.

    இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதற்கிடையே கனமழை காரணமாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு இடங்களில் மழை நீர் புகுந்தது.

    மேற்கூரையில் உள்ள இடைவெளி வழியாக அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பகுதிக்குள் மழைநீர் புகுந்தது.

    இதனால் அங்கிருந்த நோயாளிகள் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்ததால் நோயாளிகளின் அறைக்குள் மழைநீர் வருவது அதிகரித்தது.

    இதை தொடர்ந்து அவசர சிகிச்சை, எலும்பு முறிவு நோயாளிகள் அங்கிருந்து வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர். உடனடியாக அங்கு தேங்கி இருந்த மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.

    மழைநீர் ஒழுகும் இடத்தை ஆய்வு செய்து அதனை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.

    முக்கியமான மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் லேசான மழைக்கே மழைநீர் புகுந்தது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மழை தீவிரம் அடைந்து தொடங்குவதற்குள் அரசு ஆஸ்பத்திரி முழுவதும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    ×