search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்: தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
    X

    மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்: தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

    மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம், பூம்புகார் தொகுதி, செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடக்கு ஒன்றியம் சார்பில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் சுப்பையன் தலைமை தாங்கினர். முன்னாள் ஒன்றிய செயலாளர் மதிவாணன், முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மாணவர் அணி அமைப்பாளர் செந்தில், பொதுக்குழு உறுப்பினர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பி.எம். அன்பழகன் வரவேற்றார்.

    வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் கலந்துக்கொண்டு பேசும்போது, மார்ச் 1-ல் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒவ்வொரு ஊராட்சிகளிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூறினார்.

    இதில் வெற்றிவேல், மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், துணை செயலாளர் சிவக்குமார், சத்தியராஜ், தாமரைச் செல்வி, பொருளாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    முடிவில் மாவட்ட பிரதிநிதி தென்னரசன் நன்றி கூறினர்.

    இதேபோல் தெற்கு ஒன்றியம் சார்பில் பொறையாரில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் முகமது மாலிக் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், மற்றும் கட்சி முன்னோடிகள் கலந்துகொண்டனர். #tamilnews
    Next Story
    ×