search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2019 சீசன் கனவு அணிக்கு டோனி கேப்டன்
    X

    ஐபிஎல் 2019 சீசன் கனவு அணிக்கு டோனி கேப்டன்

    பிரபலமான கிரிக்இன்போ இணையதளம் வெளியிட்டுள்ள ஐபிஎல் 2019 சீசன் கனவு அணிக்கு எம்எஸ் டோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    12-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி பரபரப்பான இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை 1 ரன்னில் தோற்கடித்து 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்த ஐபிஎல் போட்டியையொட்டி கிரிக்கெட் இணைய தளமான ‘கிரிக்இன்போ’ கனவு அணியை வெளியிட்டுள்ளது. இந்த அணிக்கு டோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வீரர்கள் வருமாறு:-

    வார்னர் (ஐதராபாத்), தவான் (டெல்லி), லோகேஷ் ராகுல் (பஞ்சாப்), ரி‌ஷப் பந்த் (டெல்லி), எம்எஸ் டோனி (கேப்டன்- சென்னை), ரஸல் (கொல்கத்தா), ஹர்த்திக் பாண்டியா (மும்பை), ஷ்ரேயாஸ் கோபால் (ராஜஸ்தான்), ரபாடா (டெல்லி), பும்ரா (மும்பை), இம்ரான் தாஹிர் (சென்னை).
    Next Story
    ×