search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது வெற்றி யாருக்கு? பஞ்சாப் - டெல்லி இன்று மோதல்
    X

    3-வது வெற்றி யாருக்கு? பஞ்சாப் - டெல்லி இன்று மோதல்

    அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியும் ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் மோத உள்ளது. #IPL2019
    மொகாலி:

    ஐ.பி.எல். போட்டியின் 13-வது லீக் ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு மொகாலியில் நடக்கிறது.

    இதில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப்- ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் 3-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பஞ்சாப் அணி தொடக்க ஆட்டத்தில் 14 ரன்னில் ராஜஸ்தானையும், 3-வது போட்டியில் 8 விக்கெட்டில் மும்பை இந்தியன்சையும் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 28 ரன்னில் தோற்றது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 37 ரன்னில் மும்பையையும், சூப்பர் ஓவரில் கொல்கத்தாவையும் தோற்கடித்தது. சென்னை சூப்பர் கிங்சிடம் 6 விக்கெட்டில் தோல்வியை தழுவியது.

    இரு அணியிலும் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    கெய்ல் சிறப்பாக விளையாடி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். அவர் இந்த தொடரில் 10 சிக்சருடன் 139 ரன் எடுத்துள்ளார். இது தவிர அகர்வால், லோகேஷ் ராகுல், டேவிட் மில்லர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் உள்ளனர்.

    டெல்லி அணியில் ரி‌ஷப்பந்த், பிரித்விஷா, கேப்டன் ஷிரேயாஸ் அய்யர், காலின் இங்ராம் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ரபடா, அமித் மிஸ்ரா போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர். #IPL2019
    Next Story
    ×