என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரசலா, கெய்லா? கொல்கத்தா - பஞ்சாப் இன்று மோதல்
Byமாலை மலர்27 March 2019 7:32 AM GMT (Updated: 27 March 2019 7:32 AM GMT)
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன. #IPL2019
கொல்கத்தா:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 6-வது ‘லீக்’ ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தன. இதனால் 2-வது வெற்றியை பெற போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தையும், கிங்ஸ் லெவன் அணி முதல் ஆட்டத்தில் 14 ரன்னில் ராஜஸ்தான் ராயல்சையும் வீழ்த்தியது.
கொல்கத்தா- பஞ்சாப் அணிகளில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடக்க ஆட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்தினார்கள்.
கொல்கத்தா அணியில் உள்ள ரசல் ஐதராபாத் அணிக்கு எதிராக 19 பந்தில் 49 ரன் எடுத்தார். மேலும் அந்த அணியில் கிறிஸ்லின், உத்தப்பா, நிதிஷ் ரானா, கேப்டன் தினேஷ் கார்த்திக், சுனில் நரீன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
பஞ்சாப் அணியில் உள்ள கிறிஸ் கெய்ல் ராஜஸ்தானுக்கு எதிராக 47 பந்தில் 79 ரன் எடுத்தார். ராகுல், சர்பிராஸ் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்த போவது ரசலா? கெய்லா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IPL2019
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 6-வது ‘லீக்’ ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தன. இதனால் 2-வது வெற்றியை பெற போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தையும், கிங்ஸ் லெவன் அணி முதல் ஆட்டத்தில் 14 ரன்னில் ராஜஸ்தான் ராயல்சையும் வீழ்த்தியது.
கொல்கத்தா- பஞ்சாப் அணிகளில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடக்க ஆட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்தினார்கள்.
கொல்கத்தா அணியில் உள்ள ரசல் ஐதராபாத் அணிக்கு எதிராக 19 பந்தில் 49 ரன் எடுத்தார். மேலும் அந்த அணியில் கிறிஸ்லின், உத்தப்பா, நிதிஷ் ரானா, கேப்டன் தினேஷ் கார்த்திக், சுனில் நரீன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
பஞ்சாப் அணியில் உள்ள கிறிஸ் கெய்ல் ராஜஸ்தானுக்கு எதிராக 47 பந்தில் 79 ரன் எடுத்தார். ராகுல், சர்பிராஸ் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்த போவது ரசலா? கெய்லா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IPL2019
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X