search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலககோப்பையில் விளையாட விஜய்சங்கர் தகுதியானவர் - கங்குலி
    X

    உலககோப்பையில் விளையாட விஜய்சங்கர் தகுதியானவர் - கங்குலி

    உலககோப்பையில் விளையாட விஜய்சங்கர் தகுதியானவர் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். #ganguly

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உலக கோப்பையில் விளையாட 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்து கணித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக உள்ளது. பும்ரா, முகமது‌ஷமி போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் நிலையான திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இங்கிலாந்தில் நடக்கும் உலககோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கிய அங்கம் வகிக்கும்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆல்-ரவுண்டர் விஜய்சங்கர் பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது. அவர் உலககோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற தகுதியானவர்.

    உலககோப்பை போட்டியில் தவான், ரோகித்சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும். 3-வது வரிசையில் விராட்கோலியும், அதன்பின் அம்பதிராயுடு, டோனி, கேதர்ஜாதவ் ஆகியோர் களம் இறங்க வேண்டும். அணி தேர்வில் கண்டிப்பாக விஜய்சங்கர் தேர்வாளர்களுக்கு சவாலாக இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கங்குலி தேர்வு செய்துள்ள உலககோப்பைக்கான இந்திய அணி வருமாறு:-

    கோலி (கேப்டன்), தவான், ரோகித்சர்மா, ராகுல், அம்பதிராயுடு, டோனி, கேதர்ஜாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, விஜய்சங்கர், குல்தீப்யாதவ், சாஹல், பும்ரா, முகமது‌ஷமி, புவனேஸ்வர்குமார், உமேஷ் யாதவ். #ganguly

    Next Story
    ×