search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    க்ரீன் பிட்ச்: பதற்றத்தைவிட ஆர்வம்தான் அதிகமாக உள்ளது- அதீத நம்பிக்கையில் விராட் கோலி
    X

    க்ரீன் பிட்ச்: பதற்றத்தைவிட ஆர்வம்தான் அதிகமாக உள்ளது- அதீத நம்பிக்கையில் விராட் கோலி

    பெர்த் டெஸ்டில் க்ரீன் பிட்சியில் விளையாட இருப்பது பதற்றத்தை விட ஆர்வம்தான் அதிகமாக உள்ளது என்று விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் பெர்த்தில் நாளை தொடங்குகிறது.

    ஸ்மித், வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலியா பேட்டிங்கில் பலம் இழந்து காணப்படுகிறது. அடிலெய்டு டெஸ்டில் புஜாரா, ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். விராட் கோலி, லோகேஷ் ராகுல் 2-வது இன்னிங்சில் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார்கள்.

    நாளை பெர்த்தில் தொடங்கும் 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால்தான் தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். இதற்கு ஒரே வழி இந்தியாவின் பேட்டிங்கை அடியோடு சீர்குலைப்பதுதான் என்ற முடிவிற்கு ஆஸ்திரேலியா வந்துள்ளது.

    பெர்த் பிட்சில் ஏற்கனவே பவுன்ஸ், வேகம் இருக்கும். தற்போது அதிக அளவில் புற்களுடன் காணப்படுகிறது. க்ரீன் பிட்ச்-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புற்கள் அதிகமாக இருந்தால் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோர் மூலம் இந்தியாவின் பேட்டிங் ஆர்டரை தகர்த்து விடலாம் என நினைக்கிறது.

    ஆனால் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகிய ஐந்து வேகப்பந்து ஆயுதத்தை வைத்திருக்கும் இந்தியா, க்ரீன் பிட்சியால் பதற்றமடையவில்லை. ஆர்வம்தான் அதிகமாக உள்ளது என்று விராட் கோலி அதீத நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘பெர்த் டெஸ்டில் எங்களுக்குத்தான் அதிக அளவில் வாய்ப்புள்ளது. இதில் எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. உண்மையிலேயே ஆஸ்திரேலியா பெர்த் போன்ற அதன் சொந்த மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடியது. ஆஸ்திரேலியாவில் உள்ள மற்ற ஆடுகளங்களை விட, பெர்த் அவர்களுக்கு அதிக அளவில் சாதகமாக இருக்கும். ஆனால், எங்களுக்கும் சமமான வாய்ப்பு உள்ளது.



    தற்போதைய காலக்கட்டத்தில் க்ரீன் பிட்ச்களை கண்டு நாங்கள் பதற்றமடையவில்லை. அதைவிட ஆர்வம்தான் அதிகமாக உள்ளது. ஏனென்றால், நாங்கள் சிறப்பாக பந்து வீசி வருகிறோம். 20 விக்கெட்டுக்களை வீழ்த்தும்போது, அவர்களுடைய துல்லிய பந்து வீச்சில் அதிக நம்பிக்கை உண்டாகும். வேகப்பந்து வீச்சாளர்கள் உச்சக்கட்ட பார்மில் இருக்கும்போது, அணிக்கு அது சிறந்த விஷயமாகும்.

    பேட்ஸ்மேன்கள் வெற்றிக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது ஊக்கத்தை கொடுக்கும். ஏனென்றால், பந்து வீச்சாளர்கள் மீது அவர்கள் அதிக அளவில் நம்பிக்கை வைத்துள்ளனர். சிறப்பாக பேட்டிங் செய்துவிட்டால், உறுதியாக விரும்பும் முடிவு கிடைக்கும் என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம்’’ என்றார்.
    Next Story
    ×