search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனி உள்ளூர் தொடரில் கட்டாயம் விளையாட வேண்டும்: முன்னாள் வீரர் அமர்நாத்
    X

    டோனி உள்ளூர் தொடரில் கட்டாயம் விளையாட வேண்டும்: முன்னாள் வீரர் அமர்நாத்

    டோனி உள்ளூர் கிரிக்கெட் தொடரில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று முன்னாள் ஆல்ரவுண்டரும், தேர்வாளரும் ஆன அமர்நாத் தெரிவித்துள்ளார். #MSDhoni
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றபின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வந்தார். தற்போது டி20-க்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

    ஏற்கனவே, பார்ம் இன்றி தவித்து வரும் டோனி, ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடினால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் அவர் இடம்பிடிக்க வேண்டுமென்றால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.



    மேலும், டோனி உள்ளூர் தொடர்களில் விளையாடினால்தான் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இந்நிலையில் முன்னாள் ஆல்ரவுண்டரும், தேர்வாளரும் ஆன மொகிந்தர் அமர்நாத், டோனி கட்டாயம் உள்ளூர் தொடரில் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மொகிந்தர் அமர்நாத் கூறுகையில் ‘‘ஒவ்வொரு தனிநபர்களும் வித்தியாசமானவர்கள். ஆனால், இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்று விரும்பினால், அவர்களின் மாநில அணிக்காக விளையாட வேண்டும். இது தொடர்பான கொள்கைகளை பிசிசிஐ முற்றிலும் மாற்ற வேண்டும். ஏராளமான மூத்த வீரர்கள் உள்ளூர் தொடர்களில் விளையாடுவதில்லை’’ என்றார்.
    Next Story
    ×