search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடவுளின் நாடான கேரளாவிற்கு வருவது மிகவும் பிடிக்கும்- இந்திய அணி கேப்டன் விராட் கோலி
    X

    கடவுளின் நாடான கேரளாவிற்கு வருவது மிகவும் பிடிக்கும்- இந்திய அணி கேப்டன் விராட் கோலி

    கடவுளின் நாடான கேரளாவிற்கு வருவது மிகவும் பிடிக்கும். ஒவ்வொருவரும் கேரளாவிற்கு செல்ல வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #INDvWI #ViratKohli
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் இந்தியா இரண்டு வெற்றி, வெஸ்ட் இண்டீஸ் ஒரு வெற்றி, ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.

    இந்தியா 2-1 என முன்னிலையில் இருக்கும் நிலையில் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி கேரளா சென்றுள்ளது. அங்கு சென்ற இந்திய அணிக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அப்போது கேரளா கடவுளின் நாடு. இங்கு வருவதை நான் மிகவும் விரும்புகிறேன். ஒவ்வொருவரும் கேரளாவிற்குச் செல்ல வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி இவ்வாறு கூறியதற்கு கேரளா கூட்டுறவு மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி டுவிட்டர் மூலம் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×