என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி வான்கடே மைதானத்தில் இருந்து மாற்றம்
Byமாலை மலர்12 Oct 2018 12:51 PM GMT (Updated: 12 Oct 2018 12:51 PM GMT)
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வான்கடே மைதானத்தில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது.
இந்த டெஸ்ட் முடிந்தபின் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 21-ந்தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது. 2-வது போட்டி இந்தூரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், டிக்கெட்டுக்களை பிரித்துக் கொள்வதில் மத்திய பிரதேச கிரக்கெட் சங்கத்திற்கும், பிசிசிஐ-க்கும் முரண்பாடு ஏற்பட்டதால் போட்டி விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டது.
3-வது போட்டி 27-ந்தேதி புனேயில் நடக்கிறது. 4-வது போட்டி அக்டோபர் 29-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மும்பை கிரிக்கெட் சங்கத்தால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாத சூழ்நிலை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் போட்டியை நடத்த பணம் பிரச்சனை ஏற்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் கூறியதாக தெரிகிறது.
இதனால் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருந்த நான்காவது ஆட்டம் மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நவம்பர் 1-ந்தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
இந்த டெஸ்ட் முடிந்தபின் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 21-ந்தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது. 2-வது போட்டி இந்தூரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், டிக்கெட்டுக்களை பிரித்துக் கொள்வதில் மத்திய பிரதேச கிரக்கெட் சங்கத்திற்கும், பிசிசிஐ-க்கும் முரண்பாடு ஏற்பட்டதால் போட்டி விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டது.
3-வது போட்டி 27-ந்தேதி புனேயில் நடக்கிறது. 4-வது போட்டி அக்டோபர் 29-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மும்பை கிரிக்கெட் சங்கத்தால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாத சூழ்நிலை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் போட்டியை நடத்த பணம் பிரச்சனை ஏற்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் கூறியதாக தெரிகிறது.
இதனால் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருந்த நான்காவது ஆட்டம் மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நவம்பர் 1-ந்தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X