search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஒரே இரவில் வீரர்களின் கேரியரை மாற்றிவிடும்- பாகிஸ்தான் வீரர்
    X

    இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஒரே இரவில் வீரர்களின் கேரியரை மாற்றிவிடும்- பாகிஸ்தான் வீரர்

    இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்த விரும்புகிறேன் என்று பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் கான் தெரிவித்துள்ளார். #INDvPAK
    இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

    ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங் அணிகள் இடம்பிடித்துள்ளன. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஹாங் காங் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹாங் காங் 116 ரன்னில் சுருண்டது.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் கான் சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்த விரும்புகிறேன் என்று உஸ்மான் கான் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து உஸ்மான் கான் கூறுகையில் ‘‘இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதால் முக்கிய கவனம் செலுத்துவார்கள். இந்த போட்டியின் மூலம் ஒரேநாள் இரவில் அவர்களின் கேரியர் மாறிவிடும்.

    இந்தியாவிற்கு எதிராக ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீச விரும்புகிறேன். ஹாங் காங் அணிக்கெதிராக மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினேன். இந்தியாவிற்கு எதிராக ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    Next Story
    ×