search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண மாஸ்கோ சென்றுள்ளார் கங்குலி
    X

    உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண மாஸ்கோ சென்றுள்ளார் கங்குலி

    மாஸ்கோவில் இன்றிரவு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண கங்குலி ரஷியா சென்றுள்ளார். #WorldCup2018 #Russia
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியை காண உலகில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் மாஸ்கோ சென்றுள்ளனர்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இடது கை பேட்ஸ்மேனும் ஆன கங்குலி கால்பந்து போட்டியின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் இங்கிலாந்து - இந்தியா இடையிலான கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக மாஸ்கோ சென்றுள்ளார். இதை கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×