search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வலுவான பெஞ்ச் ஸ்ட்ரெந்த் மகிழ்ச்சியை தருகிறது- இந்தியா ஏ பயிற்சியாளர் டிராவிட்
    X

    வலுவான பெஞ்ச் ஸ்ட்ரெந்த் மகிழ்ச்சியை தருகிறது- இந்தியா ஏ பயிற்சியாளர் டிராவிட்

    இந்தியா ‘ஏ’ அணியில் வலுவான் பெஞ்ச் ஸ்ட்ரெந்த்-ஐ பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். #RahulDravid
    இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்து சென்று முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்தியா ‘ஏ’ அணியுடன், வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்தின. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

    அதன்பின் நடைபெற்ற அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா ‘ஏ’ அணி, நேற்றைய இறுதிப் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் நான்கு சதங்களை விளாசினார்கள். அத்துடன் நான்கு பேரின் சராசரி 50-க்கு மேலாகும்.

    இதேபோல் பந்து வீச்சாளர்களில் தீபக் சாஹர், கலீல் அஹமது, அக்சார் பட்டேல் போன்றோர் தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். ராகுல் டிராவிட் இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்துள்ள அனைத்து வீரர்களுக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பு அளித்தனர். மாறுபட்ட சூழ்நிலைக் கொண்ட இங்கிலாந்து மண்ணில் அனைத்து வீரர்களும் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்.

    பெஞ்ச் ஸ்ட்ரெந்த் வலுவாக உள்ளதால் ராகுல் டிராவிட் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘ஏராளமான விஷயங்கள் உள்ள இந்த தொடரில் வெற்றியை மட்டும் பேசுவது அவசியமற்றது. முதல் போட்டியை தவிர்த்து இந்த தொடர் முழுவதும் நாங்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.

    முதன்முறையாக இங்கிலாந்து மண்ணில் விளையாடிய இளம் வீரர்கள் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள். அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பதற்காக சுழற்சி முறையை பின்பற்றினோம்.

    ஒருசில சிறந்த வெளிப்பட்டால் திருப்தி ஏற்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் பேட் மற்றும் பந்து வீச்சில் கடும் போராட்டம் நடத்தினோம். இங்கிலாந்து சூழ்நிலையில் இதுபோன்ற போட்டியை பார்ப்பது சிறப்பானது. முடிவு எதுவாக இருந்தாலும் சில வீரர்கள் இந்திய தேசிய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.



    உலகக்கோப்பை தொடர் விரைவில் வர இருப்பதால், இதுபோன்ற சூழ்நிலையில் விளையாட வேண்டிய வீரர்கள் தேவை என்ற சூழ்நிலை வந்தால், வலுவான் பெஞ்ச் ஸ்டிரெந்த் அதிகரித்துக் கொள்ள தேர்வாளர்களுக்கு இங்கு சிறந்த வீரர்கள் உள்ளனர் என்பது தெரியும். இந்த தொடர் உலகக்கோப்பைக்கு சிறந்த அனுபவமாக இருக்கும்.

    இங்கு பெஞ்ச் ஸ்ட்ரெந்த் முன்னேற்றம் அடைந்துள்ளது. இது வீரர்களுக்கு உறுதியை கொடுக்கும்’’ என்றார்.
    Next Story
    ×