search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018 இறுதிப் போட்டி- சென்னை டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு - ஹர்பஜன் சிங் இல்லை
    X

    ஐபிஎல் 2018 இறுதிப் போட்டி- சென்னை டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு - ஹர்பஜன் சிங் இல்லை

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2018Final #CSKvSRH
    ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப் போட்டி மும்பை வான்கேடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் மாலை 6.30 மணிக்கு சுண்டப்பட்டது. டோனி டாஸ் சுண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ‘டெய்ல்’ என அழைத்தார்.

    ஆனால் ‘ஹெட்’ விழ டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டு கரண் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கலீல், சகா நீக்கப்பட்டு சந்தீப் மற்றும் கோஸ்வாமி சேர்க்கப்பட்டுள்ளனர்.



    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. தவான், 2. கேன் வில்லியம்சன், 3. ஷாகிப் அல் ஹசன், 4. யூசுப் பதான், 5. தீபக் ஹூடா, 6. கோஸ்வாமி, 7. பிராத்வைட், 8. புவனேஸ்வர் குமார், 9. ரஷித் கான், 10. சித்தார்த் கவுல், 11. சந்தீப் சர்மா
    Next Story
    ×