search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது- தோல்வி குறித்து டோனி கருத்து
    X

    டெல்லி அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது- தோல்வி குறித்து டோனி கருத்து

    சென்னைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததாக சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியுள்ளார்.#IPL2018 #DDvCSK #Dhoni #Csk
    புதுடெல்லி:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியிடம் வீழ்ந்து 5-வது தோல்வியை தழுவியது.

    பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய டெல்லி டேர்டெவில் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 20 ஓவர் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் 34 ரன்னில் சென்னை அணி தோற்றது.

    அம்பதிராயுடு அதிகபட்சமாக 29 பந்தில் 50 ரன், (14 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். போல்ட், அமித்மிஸ்ரா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இந்த வெற்றி முலம் சென்னை அணிக்கு டெல்லி பதிலடி கொடுத்தது.

    இந்த தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:-

    இந்த தோல்வி ஏமாற்றமாக இருந்தாலும் எங்களால் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்க முடியும் என்று நினைக்கவில்லை, 2-வது பகுதியில் ஆடுகளம் ரன் எடுக்க மிகவும் கடினமாகி விட்டது. ‘பிட்ச்‘ எப்படி மாறும் என்பதை கணிக்க கடினமாக இருந்தது. பந்து தொடர்ந்து மெதுவாகவே வந்தது, அதோடு டெல்லி அணி பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். இதனால் போட்டி மாறிவிட்டது.

    சில ஏரியாவில் நாங்கள் இன்னும் மேம்பட வேண்டும் தொடக்கத்தில் மட்டுமல்ல மிடில் ஆர்டரிலும் பார்ட்னர்ஷிப் அமைய வேண்டும். இதுவரை நாங்கள் அதிகமான பேட்ஸ்மேன்களை பயன்படுத்தவில்லை. அடுத்த போட்டியில் யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கலாம்.

    உடல் ரீதியாக பலமாக இருப்பதை விட மனரீதியாக தயார் நிலையில் இருப்பது தான் முக்கியம். கடைசி கட்ட ஓவர்களில் பந்து வீசுவதில் சரியாகிவிட்டால் எங்கள் அணி சிறந்ததுதான். இன்னும் ஒரே ஒரு லீக் ஆட்டம் இருக்கிறது.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.#IPL2018 #DDvCSK #Dhoni #Csk
    Next Story
    ×