search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணுக்கால் காயம் இருந்த போதிலும் சாம்பியன்ஸ் லீக் இறுதியில் ரொனால்டோ விளையாடுகிறார்
    X

    கணுக்கால் காயம் இருந்த போதிலும் சாம்பியன்ஸ் லீக் இறுதியில் ரொனால்டோ விளையாடுகிறார்

    சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ரொனால்டோ விளையாடுவார் என ரியல் மாட்ரிட் தெரிவித்துள்ளது. #UCL #RealMadird
    ரியல் மாட்ரிட் - பார்சிலோனா இடையிலான ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது. இந்த ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. ரியல் மாட்ரிட் அணியின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 14-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற உதவியாக இருந்தார். இந்த கோல் அடிக்கும்போது அவருக்கு கணுக்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

    இதனால் 2-வது பாதி நேரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடவில்லை. லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணி புதன்கிழமை செவியா அணிக்கு எதிராக விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. அதேவேளையில் காயம் குணமடைவதற்கான சிகிச்சை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் விளையாடுவாரா? என்பது சந்தேகமே. ஆனால் இந்தமாதம் 26-ந்தேதி நள்ளிரவு (சனிக்கிழமை) நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவார் என்று ரியல்மாரிட் கிளப் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×