search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்பியன்ஸ் லீக்"

    • இரு அணிகளும் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கவில்லை.
    • 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி அபாரமான கோல் அடித்தார்.

    இஸ்தான்புல்:

    ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சார்பில் ஆண்டுதோறும் கிளப் அணிகளுக்கிடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் ஃபிஃபா உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது.

    அவ்வகையில், இந்த ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இஸ்தான்புல் நகரில் உள்ள அட்டாடர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில், மான்செஸ்டர் சிட்டி, இன்டர் மிலன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இரு அணிகளுமே எதிரணியின் தடுப்பாட்டத்தை முறியடித்து கோல் அடிக்க முயன்றன. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கப்படவில்லை. 

    இந்நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி முன்னேறியது. 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி, எதிரணியின் தடுப்பாட்டத்தை முறியடித்து அபாரமான கோல் அடித்தார். இதன்மூலம் மான்செஸ்டர் சிட்டி 1-0 என முன்னிலை பெற்றது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. அதன்பின்னர் இன்டர் சிட்டி அணி பதிலடி கொடுக்க முயன்றும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் கிளப் தொடங்கிய 143 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது.

    சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் லெக்கில் மான்செஸ்டர் யுனைடெட்டை 2-0 என வீழ்த்தியது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன். #PSG
    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு அணிகளும் தங்களுடைய சொந்த மைதானத்தில் தலா ஒருமுறை மோத வேண்டும். இரண்டு போட்டியில் அதிக கோல் அடிக்கும் அணி காலிறுதிக்கு முன்னேறும்.

    இன்று நடைபெற்ற முதல் லெக் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் - பி.எஸ்.ஜி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நெய்மர், கவானி இல்லாமல் பி.எஸ்.ஜி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.



    2-வது பாதி நேரத்தில் பி.எஸ்.ஜி. வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 53-வது நிமிடத்தில் அந்த அணியின் ப்ரெஸ்னெல் கிம்பெம்பே முதல் கோல் அடித்தார். 60-வது நிமிடத்தில் கிலியான் மப்பே ஒரு கோல் அடித்தார். இதனால் பி.எஸ்.ஜி. 2-0 என முன்னிலை பெற்றது. இதற்கு மான்செஸ்டர் அணியால் பதில் கோல் அடிக்க இயலவில்லை. ஆகவே பி.எஸ்.ஜி. 2-0 என வெற்றி பெற்றது.
    ×