என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் மேட்ச் நடத்தினாலும் விசில் போட வரும் என் தமிழினம் - ஹர்பஜன் சிங் நெகிழ்ச்சி
Byமாலை மலர்19 April 2018 9:38 AM GMT (Updated: 19 April 2018 10:07 AM GMT)
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் புனேவில் நடக்கும் போட்டியை காண ஏற்பாடு செய்யப்பட்ட விசில் போடு சிறப்பு ரெயில் குறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #HarbhajanSingh #CSKFansOfficial #whistlepoduexpress
மும்பை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
காவிரி போராட்டம் காரணமாக சென்னையில் ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. ஒரே ஒரு ஆட்டம் மட்டும் கடந்த 10-ந்தேதி நடத்தப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருந்த எஞ்சிய 6 ஆட்டங்களும் மராட்டிய மாநிலம் புனேக்கு மாற்றப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் புனேயில் நாளை (20-ந்தேதி) நடக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புனேயில் விளையாடும் ஆட்டத்தை காண சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று அவர்கள் புனேக்கு செல்ல சிறப்பு ரெயிலை ஏற்பாடு செய்தது.
அதன்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் புனேயில் நாளை நடைபெறும் போட்டியை காண நன்கொடை டிக்கெட் வழங்கப்பட்டது. சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கான சிறப்பு ரெயில் இன்று காலை சென்ட்ரலில் இருந்து புனேக்கு புறப்பட்டது. இந்த சிறப்பு ரெயில் ‘‘விசில்போடு’’ எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டது.
இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் உடை மற்றும் கொடியுடன் ரசிகர்கள் புறப்பட்டனர். தீவிர ரசிகரான சரவணன் உள்ளிட்ட 1000 ரசிகர்கள் சென்ட்ரலில் இருந்து உற்சாகமாக வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்த ஹர்பஜன் சிங், டுவிட்டரில் தமிழில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், சென்னை ரசிகர்கள் சிறப்பு ரெயில் செல்வது குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை". அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்! உங்கள் அன்புக்கு நானடிமை! நீங்க வேற லெவல் மாஸ் யா @ChennaiIPL @CSKFansOfficial அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் #pune get ready என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் போட்டிகள் சென்னையிலிருந்து புனேவிற்கு மாற்றப்பட்டதற்கு ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #HarbhajanSingh #CSKFansOfficial #whistlepoduexpress
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
காவிரி போராட்டம் காரணமாக சென்னையில் ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. ஒரே ஒரு ஆட்டம் மட்டும் கடந்த 10-ந்தேதி நடத்தப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருந்த எஞ்சிய 6 ஆட்டங்களும் மராட்டிய மாநிலம் புனேக்கு மாற்றப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் புனேயில் நாளை (20-ந்தேதி) நடக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புனேயில் விளையாடும் ஆட்டத்தை காண சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று அவர்கள் புனேக்கு செல்ல சிறப்பு ரெயிலை ஏற்பாடு செய்தது.
அதன்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் புனேயில் நாளை நடைபெறும் போட்டியை காண நன்கொடை டிக்கெட் வழங்கப்பட்டது. சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கான சிறப்பு ரெயில் இன்று காலை சென்ட்ரலில் இருந்து புனேக்கு புறப்பட்டது. இந்த சிறப்பு ரெயில் ‘‘விசில்போடு’’ எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டது.
இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் உடை மற்றும் கொடியுடன் ரசிகர்கள் புறப்பட்டனர். தீவிர ரசிகரான சரவணன் உள்ளிட்ட 1000 ரசிகர்கள் சென்ட்ரலில் இருந்து உற்சாகமாக வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்த ஹர்பஜன் சிங், டுவிட்டரில் தமிழில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், சென்னை ரசிகர்கள் சிறப்பு ரெயில் செல்வது குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை". அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்! உங்கள் அன்புக்கு நானடிமை! நீங்க வேற லெவல் மாஸ் யா @ChennaiIPL @CSKFansOfficial அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் #pune get ready என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் போட்டிகள் சென்னையிலிருந்து புனேவிற்கு மாற்றப்பட்டதற்கு ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #HarbhajanSingh #CSKFansOfficial #whistlepoduexpress
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X