search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டி20யில் டக்அவுட் ஆகி மோசமான சாதனையை பதிவு செய்த ரோகித் சர்மா
    X

    2-வது டி20யில் டக்அவுட் ஆகி மோசமான சாதனையை பதிவு செய்த ரோகித் சர்மா

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டி20-யில் டக்அவுட் மூலம் வெளியேறிய ரோகித் சர்மா மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். #SAvIND #Hitman
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 188 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர்களாக தவான், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள்.

    முதல் ஓவரை சந்தித்த தவான் ரன்ஏதும் எடுக்காம் மெய்டன் ஆக்கினார். 2-வது ஓவரை ரோகித் சர்மா சந்தித்தார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே ரோகித் சர்மா டாலா பந்தில் எல்பிடபிள்யூ ஆகி டக்அவுட் ஆனார்.



    இதன் மூலம் டி20 போட்டிகளில் நான்கு முறை டக்அவுட் ஆகி, அதிக முறை டக்அவுட் ஆகிய முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா, யூசுப் பதான் ஆகியோர் மூன்று முறை டக்அவுட் ஆகியிருந்தார்கள். இவர்களின் மோசமான சாதனையை முறியடித்து ரோகித் சர்மா முதல் இடத்தில் இருக்கிறார்.

    ரோகித் சர்மா 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டியில் சதம் அடித்தார். அதை தவிர்த்து ஐந்து இன்னிங்சில் 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்டில் 78 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×