என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
படுதோல்வி அடைந்தாலும் இங்கிலாந்துக்கு வாழ்த்து தெரிவித்த ஆஸி. பயிற்சியாளர்
Byமாலை மலர்29 Jan 2018 11:21 AM GMT (Updated: 29 Jan 2018 11:21 AM GMT)
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் படுதோல்வியடைந்தாலும் இங்கிலாந்துக்கு ஆஸ்திரேலியா பயிற்சியாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார். #AUSvENG
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா 4-0 எனக் கைப்பற்றியது. மெல்போர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் மட்டும் டிராவில் முடிந்தது.
அதன்பின் இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. மெல்போர்ன், பிரிஸ்பேன், சிட்னியில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது.
அடிலெய்டில் நடைபெற்ற 4-வது போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று பெர்த்தில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4-1 எனத் தொடரைக் கைப்பற்றி இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை படுதோல்வியடையச் செய்தது.
படுதோல்வியை சந்தித்தாலும் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியை வெகுவாக பாராட்டியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமென்.
இதுகுறித்து லீமென் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். எங்களை விட சிறப்பாக விளையாடினீர்கள்’’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை நேரில் வந்து பார்த்து மகிழந்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். #AUSvENG
அதன்பின் இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. மெல்போர்ன், பிரிஸ்பேன், சிட்னியில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது.
அடிலெய்டில் நடைபெற்ற 4-வது போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று பெர்த்தில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4-1 எனத் தொடரைக் கைப்பற்றி இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை படுதோல்வியடையச் செய்தது.
படுதோல்வியை சந்தித்தாலும் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியை வெகுவாக பாராட்டியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமென்.
இதுகுறித்து லீமென் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். எங்களை விட சிறப்பாக விளையாடினீர்கள்’’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை நேரில் வந்து பார்த்து மகிழந்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். #AUSvENG
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X