என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய அணி விளையாட மறுத்திருந்தால் சிறுபிள்ளை தனம் என கூறியிருப்பார்கள் - கவாஸ்கர் காட்டம்
Byமாலை மலர்27 Jan 2018 5:26 AM GMT (Updated: 27 Jan 2018 5:26 AM GMT)
ஜோகன்னஸ்பர்க் வான்டரர்ஸ் ஆடுகளம் கடினமாக இருக்கிறது என விளையாட மறுத்திருந்தால் சிறுபிள்ளை தனம் என கூறியிருப்பார்கள் என சுனில் கவாஸ்கர் கூறினார். #SAvsIND #JohannesburgTest
ஜோகன்னஸ்பர்க்:
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையே கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வரும் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஆடுகளத்தில் பந்து நேற்று சீரற்ற முறையில் பவுன்ஸ் ஆனது. அதாவது களத்தில் பந்து சில இடங்களில் விழுந்து எழும்பிய போது, வீரர்களின் உடலை பதம்பார்த்தன. கோலி, விஜய்க்கு பந்து கையில் தாக்கி வலியால் அவதிப்பட்டனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய ஷாட்பிட்ச் பந்து, தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கரின் ஹெல்மெட்டை வேகமாக தாக்கியது. இதனால் முன்கூட்டியே ஆட்டத்தை நிறுத்த வேண்டியதாகி விட்டது.
இந்திய அணியினரும் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் பிடித்தபோது பலமுறை பந்தினால் காயமடைந்தனர். ஆனால் ஆட்டம் நிறுத்தப்படவில்லை. தென்ஆப்பிரிக்க அணி விளையாடும் போது ஆடுகளம் சீராக இல்லை என ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கமாண்ட்ரி அறையில் பேசிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்சுனில் கவாஸ்கர், 'ஆடுகளம் கடினமான இருப்பதாக கூறி இந்திய அணி விளையாட மறுத்திருந்தால் சிறுபிள்ளை தனம் என்று கூறியிருப்பார்கள்' என கோபமாக பேசினார். #SAvsIND #JohannesburgTest
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையே கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வரும் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஆடுகளத்தில் பந்து நேற்று சீரற்ற முறையில் பவுன்ஸ் ஆனது. அதாவது களத்தில் பந்து சில இடங்களில் விழுந்து எழும்பிய போது, வீரர்களின் உடலை பதம்பார்த்தன. கோலி, விஜய்க்கு பந்து கையில் தாக்கி வலியால் அவதிப்பட்டனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய ஷாட்பிட்ச் பந்து, தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கரின் ஹெல்மெட்டை வேகமாக தாக்கியது. இதனால் முன்கூட்டியே ஆட்டத்தை நிறுத்த வேண்டியதாகி விட்டது.
இந்திய அணியினரும் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் பிடித்தபோது பலமுறை பந்தினால் காயமடைந்தனர். ஆனால் ஆட்டம் நிறுத்தப்படவில்லை. தென்ஆப்பிரிக்க அணி விளையாடும் போது ஆடுகளம் சீராக இல்லை என ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கமாண்ட்ரி அறையில் பேசிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்சுனில் கவாஸ்கர், 'ஆடுகளம் கடினமான இருப்பதாக கூறி இந்திய அணி விளையாட மறுத்திருந்தால் சிறுபிள்ளை தனம் என்று கூறியிருப்பார்கள்' என கோபமாக பேசினார். #SAvsIND #JohannesburgTest
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X