search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி இறுதிப்போட்டி: விதர்பா அணி முன்னிலை
    X

    ரஞ்சி இறுதிப்போட்டி: விதர்பா அணி முன்னிலை

    ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் இன்று 3-வது நாள் ஆட்டத்தில் விதர்பா அணி 87 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்களை குவித்துள்ளது. #RanjiTrophyFinal
    இந்தூர்:

    டெல்லி-விதர்பா அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இந்தூரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் டெல்லி 295 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய விதர்பா அணி நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 67 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 206 ரன் எடுத்து இருந்தது. வாசில் ஜாபர் 61 ரன்னுடன் களத்தில் இருந்தார். இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது.

    வாக்ஹரே 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வாசிம் ஜாபர் 78 ரன்னில் ஆட்டம் இழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது.

    வாட்கர்- ஷார்வாடே ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்ந்தது. இருவரும் சிறப்பான ஆட்டத்தால் விதர்பா அணி முன்னிலை பெற்றது.

    அந்த அணி 87 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்னை குவித்தது. அப்போது வாட்கர் 21 ரன்னிலும், ஷார்வாடே 33 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
    Next Story
    ×