என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி.என்.பி.எல்: திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ‘த்ரில்’ வெற்றி
Byமாலை மலர்13 Aug 2017 5:41 PM GMT (Updated: 13 Aug 2017 5:41 PM GMT)
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திண்டுக்கல்:
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் லீக்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் ஜகதீசன் 53 (42) ரன்களும், விக்டர் 45 (40) ரன்களும் எடுக்க திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. சேப்பாக் அணியில் அலெக்சாண்டர் மற்றும் அந்தோனி தாஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுபாஷ் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆக மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இடைநிலை வீரர்களாக களமிறங்கிய சசிதேவ் 45(32) மற்றும் அந்தோனி தாஸ் 38(21) சற்று நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இறுதிக்கட்டத்தில் இருவரும் அவுட் ஆக பரபரப்பான நிலைக்கு ஆட்டம் சென்றது. கடைசி ஓவர்களில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் சேப்பாக் வீரர் ராகுல் சிக்சர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் சேப்பாக் அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் லீக்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் ஜகதீசன் 53 (42) ரன்களும், விக்டர் 45 (40) ரன்களும் எடுக்க திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. சேப்பாக் அணியில் அலெக்சாண்டர் மற்றும் அந்தோனி தாஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுபாஷ் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆக மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இடைநிலை வீரர்களாக களமிறங்கிய சசிதேவ் 45(32) மற்றும் அந்தோனி தாஸ் 38(21) சற்று நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இறுதிக்கட்டத்தில் இருவரும் அவுட் ஆக பரபரப்பான நிலைக்கு ஆட்டம் சென்றது. கடைசி ஓவர்களில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் சேப்பாக் வீரர் ராகுல் சிக்சர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் சேப்பாக் அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X