search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5-வது புரோ கபடி லீக் போட்டியின் பரிசுத்தொகை ரூ.8 கோடியாக அதிகரிப்பு
    X

    5-வது புரோ கபடி லீக் போட்டியின் பரிசுத்தொகை ரூ.8 கோடியாக அதிகரிப்பு

    28-ந்தேதி தொடங்க உள்ள 12 அணிகள் பங்கேற்கும் 5-வது புரோ கபடி லீக் போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    12 அணிகள் பங்கேற்கும் 5-வது புரோ கபடி லீக் போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான மொத்த பரிசுத்தொகை ரூ.8 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது முந்தைய சீசனை விட 4 மடங்கு அதிகமாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், இறுதி ஆட்டத்தில் தோல்வி அடையும் அணிக்கு ரூ.1.8 கோடியும், 3-வது, 4-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.1.2 கோடியும் வழங்கப்படும்.

    இதற்கிடையே பெங்களூரு புல்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் குமாரும், துணை கேப்டனாக ரவிந்தர் பஹாலும் செயல்படுவார்கள் என்று அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×