search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் - மம்தா பானர்ஜி
    X

    கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் - மம்தா பானர்ஜி

    தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம். அது வாக்கு இயந்திரங்களை மாற்றி, தில்லுமுல்லு செய்யும் முயற்சி என மம்தா பானர்ஜி பானர்ஜி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் இன்று மாலை வெளியான சில ஊடகங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம். அது வாக்கு இயந்திரங்களை மாற்றி, தில்லுமுல்லு செய்யும் முயற்சி என மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, இன்றிரவு தனதுடுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் கருத்துக் கணிப்புகளை நான் நம்புவதில்லை. இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் எல்லாம் வாக்கு இயந்திரங்களை மாற்றவும் அவற்றில் தில்லுமுல்லு செய்யவும் ஆடப்படும் நாடகம்தான்.

    உறுதியோடும், தைரியமாகவும், ஒற்றுமையாகவும் எதிர்த்துப் போராடி இந்த போர்க்களத்தில் நாம் வென்றாக வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×