search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் முலாயம்-மாயாவதி பிரசாரம்
    X

    பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் முலாயம்-மாயாவதி பிரசாரம்

    உத்தர பிரதேசத்தில் எதிரும் புதிருமான தலைவர்கள் முலாயம் சிங் யாதவ், மாயாவதி இருவரும் பல ஆண்டுகளுக்கு பின் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தது தொண்டர்களை உற்சாகமடைய செய்துள்ளது. #MulayamMayawati #LokSabhaElections2019
    மெயின்புரி:

    உத்தர பிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜ்- சமாஜ்வாடி கட்சிகள், இந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் எனும் நோக்கத்துடன் கூட்டணி அமைத்து களமிறங்கியுள்ளன. இதற்காக இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், மெயின்புரியில் இன்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில், சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் ஒரே மேடையில் அமர்ந்து பிரசாரம் செய்தனர். அரசியலில் எதிரும் புதிருமான இரு தலைவர்களும், பல ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடுகளை மறந்து  ஒரே மேடையில் பிரசாரம் செய்தது கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேடையில், முதலில் பேசிய சமாஜ்வாடி எம்எல்ஏ, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் காலைத் தொட்டு வணங்கி அவரை வரவேற்று பேசினார். அப்போது, தனது ஆதரவாளர்கள் அனைவரும் மாயாவதிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



    பின்னர் உரையாற்றிய முலாயம் சிங், “நீண்ட காலத்திற்குப் பிறகு தானும் மாயாவதியும் ஒரே மேடையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் அவரை வரவேற்பதுடன், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளும் அவரை வரவேற்று, நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

    மாயாவதி பேசும்போது, “தலைவர் முலாயம் சிங் யாதவ், சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் தன்னுடன் இணைத்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் உண்மையான  தலைவர். குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான தலைவர். மோடி போன்று போலியான தலைவர் அல்ல” என பாராட்டினார். #MulayamMayawati #LokSabhaElections2019
    Next Story
    ×