என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்தியஸ்தம் செய்ய அனுமதி உண்டா? - அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு
Byமாலை மலர்7 March 2019 9:43 PM GMT (Updated: 7 March 2019 9:43 PM GMT)
அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண வழி உண்டா என்பது தொடர்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் இன்று வழங்குகிறது. #SupremeCourt #AyodhyaLand
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் இன்னும் விடை கிடைக்கவில்லை.
இது தொடர்பான வழக்கை அலகாபாத் ஐகோர்ட் விசாரித்து, வழக்கில் தொடர்புடைய சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வின் முன் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண வழி உண்டா என்ற கேள்வியை சுப்ரீம் கோர்ட் எழுப்பியது. இதை நிர்மோகி அகாரா தவிர்த்த பிற இந்து அமைப்புகள் எதிர்க்கின்றன. முஸ்லிம் அமைப்புகள் ஏற்கின்றன.
இது தொடர்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்குகிறது. அப்போது அயோத்தி பிரச்சினையில் மத்தியஸ்தர்களை நியமித்து, இணக்கமான தீர்வு காண்பதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி தருமா என்பது தெரிய வரும்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் இன்னும் விடை கிடைக்கவில்லை.
இது தொடர்பான வழக்கை அலகாபாத் ஐகோர்ட் விசாரித்து, வழக்கில் தொடர்புடைய சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண வழி உண்டா என்ற கேள்வியை சுப்ரீம் கோர்ட் எழுப்பியது. இதை நிர்மோகி அகாரா தவிர்த்த பிற இந்து அமைப்புகள் எதிர்க்கின்றன. முஸ்லிம் அமைப்புகள் ஏற்கின்றன.
இது தொடர்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்குகிறது. அப்போது அயோத்தி பிரச்சினையில் மத்தியஸ்தர்களை நியமித்து, இணக்கமான தீர்வு காண்பதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி தருமா என்பது தெரிய வரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X