என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அபினந்தன் தாயகம் திரும்பியதில் மகிழ்ச்சி - விமானப்படை தளபதி பேட்டி
Byமாலை மலர்1 March 2019 4:45 PM GMT (Updated: 1 March 2019 4:45 PM GMT)
இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் தாயகம் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என விமானப்படை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் தெரிவித்துள்ளார். #AbhinandanReturn #WelcomeHero #WelcomeHomeAbhinadan #RGKKapoor
புதுடெல்லி:
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானி அபினந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என அந்நாட்டு பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் நேற்று அறிவித்தார்.
இன்று மாலை அபினந்தன் வாகா எல்லை வந்தடைந்தார். ஆனால், அவரை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால், இரவு 9 மணியளவில் பாகிஸ்தான் அதிகாரிகள் தமிழக வீரர் அபினந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் தாயகம் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என விமானப்படை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஆர் ஜி கே கபூர் கூறுகையில், இரு நாடுகளின் நடைமுறைப்படி விமானப்படை வீரர் அபினந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். வழக்கமான நடைமுறைப்படி அபினந்தன் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவார். அபினந்தன் தாயகம் திரும்பியதில் இந்திய விமானப்படை மகிழ்ச்சி அடைகிறது என குறிப்பிட்டுள்ளார். #AbhinandanReturn #WelcomeHero #WelcomeHomeAbhinadan #RGKKapoor
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X