search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்காம் என்கவுண்டர்- 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்
    X

    பத்காம் என்கவுண்டர்- 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டத்தில் நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter #MilitantsNeutralised
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டம், கோபால்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.



    அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. #JKEncounter #MilitantsNeutralised
    Next Story
    ×