என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேட்டில் ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு - உள்துறைக்கு சட்ட அமைச்சகம் தகவல்
Byமாலை மலர்3 Feb 2019 8:19 PM GMT (Updated: 3 Feb 2019 8:19 PM GMT)
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேட்டில் சி.பி.ஐ. கொடுத்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர அனுமதிக்கலாம் என சட்ட அமைச்சகம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. #INXMedia #CBI #PChidambaram
புதுடெல்லி:
2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடு ரூ.305 கோடி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ.10 லட்சம் பெற்றதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டார். ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர சி.பி.ஐ. மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.
இந்நிலையில் சட்ட அமைச்சகம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர சட்டரீதியாக வலுவான முகாந்திரம் உள்ளது. சி.பி.ஐ. கொடுத்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #INXMedia #CBI #PChidambaram
2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடு ரூ.305 கோடி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ.10 லட்சம் பெற்றதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டார். ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர சி.பி.ஐ. மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.
இந்நிலையில் சட்ட அமைச்சகம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர சட்டரீதியாக வலுவான முகாந்திரம் உள்ளது. சி.பி.ஐ. கொடுத்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #INXMedia #CBI #PChidambaram
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X