என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு - ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை
Byமாலை மலர்7 Jan 2019 9:08 PM GMT (Updated: 7 Jan 2019 9:08 PM GMT)
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை நடத்தியது. #Chidambaram #INXMedia
புதுடெல்லி:
ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்த போது ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டை பெற ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குனர்கள் மற்றும் இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்படி வருகிற 15-ந் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறை, சி.பி.ஐ.க்கு டெல்லி ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. அதே சமயம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ப.சிதம்பரத்துக்கு கோர்ட்டு அறிவுறுத்தியது.
அதன்படி கடந்த மாதம் அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ப.சிதம்பரம் ஆஜராகினார். இந்நிலையில் நேற்று மீண்டும் ஆஜராக அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ப.சிதம்பரம் ஆஜரானார். அப்போது அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி கேள்விகள் எழுப்பினர். அந்த கேள்விகளுக்கு ப.சிதம்பரம் பதில் அளித்தார். அவருடைய வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
ஏற்கனவே ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கிலும் அமலாக்கத்துறை முன்பு ப.சிதம்பரம் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. #Chidambaram #INXMedia
ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்த போது ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டை பெற ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குனர்கள் மற்றும் இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்படி வருகிற 15-ந் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறை, சி.பி.ஐ.க்கு டெல்லி ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. அதே சமயம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ப.சிதம்பரத்துக்கு கோர்ட்டு அறிவுறுத்தியது.
அதன்படி கடந்த மாதம் அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ப.சிதம்பரம் ஆஜராகினார். இந்நிலையில் நேற்று மீண்டும் ஆஜராக அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ப.சிதம்பரம் ஆஜரானார். அப்போது அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி கேள்விகள் எழுப்பினர். அந்த கேள்விகளுக்கு ப.சிதம்பரம் பதில் அளித்தார். அவருடைய வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
ஏற்கனவே ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கிலும் அமலாக்கத்துறை முன்பு ப.சிதம்பரம் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. #Chidambaram #INXMedia
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X