search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான ஜின்சு
    X
    கைதான ஜின்சு

    கல்லூரி மாணவி உள்பட 20 பெண்களுக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

    பேஸ்புக் மூலம் பழகி கல்லூரி மாணவி உள்பட 20 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கல்லரா பகுதியை சேர்ந்தவர் சைஜூ. இவரது மகன் ஜின்சு (24). ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவர் கடந்த 3 மாதங்களாக பேஸ்புக் மூலம் சில பெண்களிடம் பழகி தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார். பின்னர் அவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவியிடம் ஜின்சு பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். அவரிடம் நன்கு பழகி வந்துள்ளார். அவரை பல்வேறு இடங்களுக்கும் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    நேற்று வாலிபர் ஜின்சு அந்த மாணவியை காரில் கல்லூரிக்கு அழைத்து சென்றார். காரில் இருந்து இறங்கிய மாணவி ஜின்சுவை பார்த்து சிரித்து கொண்டே சென்றுள்ளார்.

    இதனை கல்லூரி முதல்வர் பார்த்து விட்டார். அவருக்கு வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர் கோட்டயம் போலீஸ் சூப்பிரண்டு அரி சங்கருக்கு புகார் தெரிவித்தார்.

    அவர் சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து விசாரணை நடத்தினார். மாணவியின் செல்போன் மூலம் பேசி ஜின்சுவை தனி இடத்திற்கு வருமாறு அழைத்தனர். அதன்படி ஜின்சு அங்கு வந்தார்.

    அங்கு மறைந்து இருந்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது கல்லூரி மாணவி மட்டுமின்றி மேலும் 19 பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததை ஒத்துக் கொண்டார்.

    அவரை கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
    Next Story
    ×