என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் பரப்பியவர் கைது
Byமாலை மலர்13 Nov 2018 2:40 PM GMT (Updated: 13 Nov 2018 2:40 PM GMT)
திருவனந்தபுரம் அருகே இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் பரப்பியவரை கைது செய்த போலீசார் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் அசுமுதீன் (வயது 53) கூலி தொழிலாளி.
அசுமுதீனுக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் கணவரை இழந்து தனியாக வசித்து வந்தார். இதனால் அசுமுதீன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்ததால் அவர்கள் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டில் அவர்கள் இருவரும் கணவன், மனைவிபோல வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்தபோது அதை அசுமுதீன் தனது செல்போனில் படம்பிடித்து உள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் இருவர் இடையே பணத்தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பெண், அசுமுதீனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அசுமுதீன் அந்த பெண்ணுடன் தான் நெருக்கமாக இருந்த ஆபாச காட்சிகளை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டார். இதை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அது பற்றி அந்த பெண்ணிடம் அவர்கள் தெரிவித்தனர்.
அப்போதுதான் அந்த பெண்ணுக்கு தனது அந்தரங்கம் அம்பலமானது தெரிய வந்தது. இதனால் அவர் இதுபற்றி கழக்கூட்டம் போலீசில் அசுமுதீன் மீது புகார் செய்தார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து அசுமுதீனை கைது செய்தனர். அவரது செல்போனையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் அசுமுதீன் (வயது 53) கூலி தொழிலாளி.
அசுமுதீனுக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் கணவரை இழந்து தனியாக வசித்து வந்தார். இதனால் அசுமுதீன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்ததால் அவர்கள் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டில் அவர்கள் இருவரும் கணவன், மனைவிபோல வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்தபோது அதை அசுமுதீன் தனது செல்போனில் படம்பிடித்து உள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் இருவர் இடையே பணத்தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பெண், அசுமுதீனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அசுமுதீன் அந்த பெண்ணுடன் தான் நெருக்கமாக இருந்த ஆபாச காட்சிகளை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டார். இதை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அது பற்றி அந்த பெண்ணிடம் அவர்கள் தெரிவித்தனர்.
அப்போதுதான் அந்த பெண்ணுக்கு தனது அந்தரங்கம் அம்பலமானது தெரிய வந்தது. இதனால் அவர் இதுபற்றி கழக்கூட்டம் போலீசில் அசுமுதீன் மீது புகார் செய்தார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து அசுமுதீனை கைது செய்தனர். அவரது செல்போனையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X