search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் தேடுதல் வேட்டையின்போது இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
    X

    காஷ்மீரில் தேடுதல் வேட்டையின்போது இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த இரு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #Twomilitantskilled #JKencounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்துக்கு உட்பட்ட குட்போரா பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் இன்று காலைவரை நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    காயங்களுடன் இரு பயங்கரவாதிகள் தப்பியோடி விட்டதாகவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். #Twomilitantskilled #JKencounter
    Next Story
    ×