என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம் - சப் இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை
Byமாலை மலர்28 Oct 2018 1:14 PM GMT (Updated: 28 Oct 2018 1:14 PM GMT)
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வீடு திரும்பிய சப் இன்ஸ்பெக்டரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Pulwama #MilitantsShooting
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் செவா காலன் பகுதியில் குண்டுகள் துளைத்த நிலையில் போலீஸ்காரர் ஒருவரது உடல் கிடப்பதை அப்பகுதி மக்கள் இன்று கண்டனர். இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் ஸ்ரீநகர் சிஐடி பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் இம்தியாஸ் அகமது மிர் என்பதும், அவர் பணி முடிந்து வீடு திரும்பியபோது பயங்கரவாதிகள் அவரை சுட்டு கொன்றதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #Pulwama #MilitantsShooting
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X