search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி அருகே செம்மரம் கடத்த முயன்ற தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது
    X

    திருப்பதி அருகே செம்மரம் கடத்த முயன்ற தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது

    திருப்பதி அருகே செம்மரம் கடத்த முயன்ற தமிழக வாலிபர்கள் 2 பேரை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். #RedSandalwood #Tirupati
    திருப்பதி:

    திருப்பதி அருகே சேஷாசல வனப்பகுதி பீமாவரம் என்ற இடத்தில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. வெங்கட்ரமணா, இன்ஸ்பெக்டர் சந்து, வன அலுவலர் லட்சுமிபதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 20 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டி காரில் ஏற்றி கொண்டிருந்தனர். அவர்களை கண்ட போலீசார் சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கும்பல் தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற போலீசார் 2 பேரை மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை சேர்ந்த வெங்கடேஷ் (24), கிருஷ்ணகிரியை சேர்ந்த கார் டிரைவர் அபு பக்கர் (23) என தெரியவந்தது.

    செம்மர கடத்தல் கும்பல் விட்டு சென்ற 14 செம்மரங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். #RedSandalwood #Tirupati

    Next Story
    ×