என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் - ராஜ்நாத் சிங்
Byமாலை மலர்23 Oct 2018 12:27 PM GMT (Updated: 23 Oct 2018 12:27 PM GMT)
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நிலவரங்களை இன்று ஆய்வு செய்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், குல்காம் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். #RajnathSingh
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் உள்ள லாரூ என்ற இடத்தில் கடந்த 21-ம் தேதி பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று காஷ்மீர் வந்தார். மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பாக கவர்னர் மற்றும் அம்மாநில உள்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காஷ்மீரில் கடந்த 4 மாதங்களில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால குறிப்பிட்டார். குறிப்பாக, பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் மீது கல்லெறியும் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த குல்காம் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு இழப்பீடாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் அறிவித்தார். #RajnathSingh #Srinagar
காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் உள்ள லாரூ என்ற இடத்தில் கடந்த 21-ம் தேதி பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தகவல் அறிந்து அருகாமையில் உள்ள பகுதிகளில் வசிக்கும் ஏராளமானவர்கள் லாரூவில் திரண்டனர். அப்போது அங்கு திடீரென்று மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டது. சக்திவாய்ந்த குண்டு வெடித்ததாக கருதப்படும் இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று காஷ்மீர் வந்தார். மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பாக கவர்னர் மற்றும் அம்மாநில உள்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காஷ்மீரில் கடந்த 4 மாதங்களில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால குறிப்பிட்டார். குறிப்பாக, பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் மீது கல்லெறியும் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த குல்காம் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு இழப்பீடாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் அறிவித்தார். #RajnathSingh #Srinagar
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X