search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிரா - பேனர் விழுந்து பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு
    X

    மகாராஷ்டிரா - பேனர் விழுந்து பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ரெயில்வே நிலையம் அருகே வைக்கப்பட்டு இருந்த பெரிய பேனர் சாலையில் விழுந்து பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. #Maharashtra
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சிவாஜி நகர் பகுதியில் உள்ள ரெயில்வே நிலையத்துக்கு அருகே மிகப்பெரிய விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இன்று அதனை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது திடீரென அந்த பேனர் அருகே இருந்த சாலையில் விழுந்தது.
     
    அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந்த பேனரால் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.



    இந்நிலையில், புனேவில் ரெயில் நிலையம் அருகில் பேனர் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷம்ராவ் கசார் (40), ஷம்ராவ் காசர் (40), ஷிவாஜி பர்தேஷி (40), ஜாவித் கான் (40) ஆகியோர் பலியானது தெரிய வந்தது.

    இதில்  ஷிவாஜி பர்தேஷி மனைவியின் அஸ்தியை கரைத்துவிட்டு திரும்பியபோது விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், பேனர் விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. #Maharashtra
    Next Story
    ×