search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதியோர் தின விழாவில் ராமநாதபுரம் கலெக்டருக்கு விருது - துணை ஜனாதிபதி வழங்கினார்
    X

    முதியோர் தின விழாவில் ராமநாதபுரம் கலெக்டருக்கு விருது - துணை ஜனாதிபதி வழங்கினார்

    மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தபோது முதியோருக்கு சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவையா துணை ஜனாதிபதியிடம் விருது பெற்றார். #VicePresident #VenkaiahNaidu #VeeraRaghavaRao
    புதுடெல்லி:

    மத்திய அரசு சார்பில் உலக முதியோர் தின விழா நேற்று டெல்லி விஞ்ஞான பவனில் நடந்தது. விழாவில் 2017-2018-ம் ஆண்டில் முதியோருக்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவையாவும் விருது பெற்றார். இவர் மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தபோது முதியோருக்கு சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

    விழாவில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி தாவர் சந்த் கெலாட், இணை மந்திரிகள் ராம்தாஸ் அத்வாலே, கிருஷ்ணா பால் குர்ஜர், விஜய் சாம்பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  #VicePresident #VenkaiahNaidu #VeeraRaghavaRao
    Next Story
    ×