search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் கொடூரம் - வேறொருவருடன் பேசி பழகியதால் தோழியை கொன்று நறுக்கிய நபர் கைது
    X

    டெல்லியில் கொடூரம் - வேறொருவருடன் பேசி பழகியதால் தோழியை கொன்று நறுக்கிய நபர் கைது

    தனது தோழி வேறொருவருடன் பேசி பழகுவதை அறிந்த நபர், அந்த பெண்ணை கொன்று உடலை துண்டுகளாக்கி சாக்கடையில் வீசிய கொடூரம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #DelhiGirlChopped
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பாரபுல்லா பாலத்தின் அடியில் இரு பைகளில் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி ரிஸ்வான் கான் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் போலீசார் கூறியதாவது:

    நிஜாமுதின் பகுதியில் உள்ள நிஜாம் நகரை சேர்ந்தவர் ரிஸ்வான் கான் (20). இவர் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண் ஒருவருடன் கடந்த 11 மாதங்களாக பழகி வந்துள்ளார். அந்த பெண் வேறு ஒருவருடன் பேசி பழகுவதை அறிந்த ரிஸ்வான், அந்த பெண்ணை கண்டித்தார். ஆனால் அவர் பேசுவதை தொடர்ந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ரிஸ்வான், அந்த பெண்ணை கடந்த ஞாயிறு அன்று சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.



    இதில் கோபமடைந்த ரிஸ்வான், தான் கொண்டு சென்ற கத்தியால் அந்த பெண்ணை குத்திக் கொன்றார். ஆனாலும் ஆத்திரம் தீராத ரிஸ்வான், அவரது உடலை பல துண்டுகளாக வெட்டினார். அதை இரு பைகளில் போட்டு அங்குள்ள பாரபுல்லா பாலத்தின் அடியில் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு சென்றுள்ளார் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் ரிஸ்வானை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்,

    தனது தோழி வேறொருவருடன் பேசி பழகுவதை அறிந்தவர், அந்த பெண்ணை கொன்று உடலை துண்டுகளாக்கி சாக்கடையில் வீசிய கொடூரம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #DelhiGirlChopped
    Next Story
    ×