என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவுக்குள் இன்று நுழைய முயன்ற 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
Byமாலை மலர்21 Sep 2018 1:36 PM GMT (Updated: 21 Sep 2018 1:36 PM GMT)
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பன்டிப்போரா மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோடு வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #LeTmilitants #LeTmilitantskilled
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம்,பன்டிப்போரா மாவட்டத்தில் உள்ள எல்லைகோட்டுப் பகுதியில் வழக்கம்போல் நேற்றிரவு இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இங்குள்ள வனப்பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சிலர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கவனித்துவிட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகும்படி எச்சரித்தனர்.
அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டபடி முன்னேறி வந்தனர். பாதுகாப்பு படை வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர். இதில் நேற்றிரவு இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஏற்கனவே பன்டிப்போரா எல்லைகோட்டுப் பகுதி வழியாக நுழைந்து பிற இடங்களுக்கு தப்பிச் செல்ல முயன்ற மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். #LeTmilitants #LeTmilitantskilled
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X