என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரகாண்டில் 15 வயது மாணவி கூட்டு பலாத்காரம் - பள்ளி நிர்வாகமே மறைத்த அவலம்
Byமாலை மலர்18 Sep 2018 9:04 AM GMT (Updated: 18 Sep 2018 9:04 AM GMT)
உத்தரகாண்ட் மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை பள்ளி நிர்வாகமே மறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Uttarakhand
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் உள்ள உறைவிடப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி மாணவர்கள் 4 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போதே இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் பள்ளியின் கவுரவம் பாதிக்கப்படும் என்பதற்காக இதனை மூடி மறைத்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது எனவும் மாணவியை மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் கருவுற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மாணவி தனது சகோதரியிடம் நடந்த அனைத்தையும் கூறவே, அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 1 மாதத்துக்கு முன்பு நடந்த இந்த கொடூரம் இப்போதே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து, 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த 4 மாணவர்களையும், இந்த சம்பவத்தை மறைத்த பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #Uttarakhand
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் உள்ள உறைவிடப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி மாணவர்கள் 4 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போதே இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் பள்ளியின் கவுரவம் பாதிக்கப்படும் என்பதற்காக இதனை மூடி மறைத்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது எனவும் மாணவியை மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் கருவுற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மாணவி தனது சகோதரியிடம் நடந்த அனைத்தையும் கூறவே, அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 1 மாதத்துக்கு முன்பு நடந்த இந்த கொடூரம் இப்போதே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து, 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த 4 மாணவர்களையும், இந்த சம்பவத்தை மறைத்த பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #Uttarakhand
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X