search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுவானில் தேஜாஸ் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பி எலைட் கிளப்பில் இணைந்த இந்தியா
    X

    நடுவானில் தேஜாஸ் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பி எலைட் கிளப்பில் இணைந்த இந்தியா

    இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜாஸ் விமானத்துக்கு சுமார் 20 ஆயிரம் அடி உயர்த்தில் நடுவானில் எரிபொருள் நிரப்பி இந்தியா சாதனை படைத்துள்ளது. #Tejas
    புதுடெல்லி:

    ரஷிய தொழில்நுட்பத்துடன் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானம் வரும் 2022-ம் ஆண்டில் விமானப்படையில் இணைய உள்ளது. இந்நிலையில், வானில் பறக்கும்போதே தேஜாஸ் போர் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பி, இந்திய விமானப்படை சாதனை படைத்துள்ளது. 

    இந்தியப் போர் விமானம் ஒன்றுக்கு வானில் எரிபொருள் நிரப்பப்பட்டது இதுவே முதன்முறை. ரஷ்யத் தயாரிப்பான IL-78 MKI  ரக டேங்கர் விமானத்திலிருந்து, தேஜாஸ் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. 

    சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. ஒரு தேஜாஸ் விமானம் ஒன்றைத் தயாரிக்க ரூ.463 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேஜாஸ் ரகத்தை சேர்ந்த 123 விமானங்களை சுமார் 50 ஆயிரம் கோடி செலவில் இந்தியா தயாரித்து வருகிறது. 
    Next Story
    ×