search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்திக் பட்டேல் உண்ணாவிரதத்தால் பதட்டம் - சமூக தலைவர்களுடன் அரசு அவசர ஆலோசனை
    X

    ஹர்திக் பட்டேல் உண்ணாவிரதத்தால் பதட்டம் - சமூக தலைவர்களுடன் அரசு அவசர ஆலோசனை

    குஜராத்தில் ஹர்திக் பட்டேல் உண்ணாவிரதத்தால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூக தலைவர்களுடன் அரசு அவசர ஆலோசனை நடத்தியது. #HardikPatel
    அகமதாபாத்:

    குஜராத்தில் பட்டேல் சமூகத்தினரின் மத்தியில் புகழ் பெற்ற தலைவராக 25 வயதே ஆன ஹர்திக் பட்டேல் திகழ்கிறார். இவர், பதிதார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

    பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கேட்டு அவர் நடத்திய போராட்டம் குஜராத்தை கிடுகிடுக்க வைத்தது.

    இப்போது அவர் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    இன்று 12-வது நாளாக உண்ணாவிரதம் நடந்து வருகிறது. இத்தனை நாளும் அவர் சாப்பிடாததால் அவர் மிகவும் சோர்வாக இருக்கிறார். அவரது உடல் எடை 20 கிலோ வரை குறைந்துள்ளது.

    கடந்த 2 நாட்களாக தண்ணீரும் குடிக்கவில்லை. இதனால் உடலில் நீர்சத்து குறைந்து உடல் அவையங்கள் பாதிக்க தொடங்கி உள்ளன. இதனால் அவரது உடல்நிலைக்கு கடும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை நிலவுகிறது.

    அவரது போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.

    அதே நேரத்தில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் குஜராத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று அரசு அவசர ஆலோசனை நடத்தியது. இதில் பட்டேல் சமூக மந்திரிகள் மற்றும் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அரசு ஹர்திக் பட்டேலுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

    ஏற்கனவே ஹர்திக் பட்டேலை குஜராத் முன்னாள் முதல்-மந்திரி சுரேஷ் மேத்தா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தினேஷ் திரிவேதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் பட்டேல், பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜிதன்ராம் மாஞ்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    நேற்று பா.ஜனதா மூத்த தலைவர்களான யஷ்வந்த்சின்கா, நடிகர் சத்ருகன்சின்கா ஆகியோர் ஹர்திக் பட்டேலை சந்தித்து பேசினார்கள்.

    இதுபற்றி யஷ்வந்த்சின்கா கூறும்போது, நாங்களும் விவசாயிகளுக்காக போராடி வருகிறோம். இப்போது இந்த பிரச்சினையை தேசிய அளவில் கொண்டு சென்று போராடுவோம்.

    விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஹர்திக் போராடுவது நியாயமானது. அவரிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார். #HardikPatel


    Next Story
    ×