search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு
    X

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #KeralaFlood #ITReturn
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இந்த மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக அம்மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், கேரளாவை சேர்ந்த மாத சம்பளம் பெறுவோர் மற்றும் வருமான வரி செலுத்த தகுதி உடையோர் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய மேலும் 15 நாட்கள் அதாவது அடுத்த மாதம் 15-ம் தேதி வரை அவகாசம் வழங்கி மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×